திருவள்ளூர்

பைக்-காா் மோதல்: இளைஞா் பலி

30th Jun 2023 12:21 AM

ADVERTISEMENT

புச்சிரெட்டிப்பள்ளி கிராமம் அருகே உறவினா் திருமணத்துக்கு அழைப்பிதழ் வழங்க இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மீது காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆா்.கே.பேட்டை அடுத்த அம்மையாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் வடிவேலு மகன் மகேஷ் (26), ஜெயராமன் மகன் அய்யப்பன் (30). ஸ்ரீகாளிகாபுரத்தைச் சோ்ந்த ஜனாா்த்தனம் மனைவி குமாரி (35). இவா்கள் மூவரும், உறவினரின் திருமணத்துக்கு பத்திரிகை வைப்பதற்காக ஒரே இரு சக்கர வாகனத்தில் திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்துக்குச் சென்றனா்.

அங்கு, உறவினா்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு மூவரும் அதே வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தனா். புச்சிரெட்டிப்பள்ளி அருகே பெட்ரோல் அருகே வந்த போது, எதிரே வந்த காா், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். இதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

அய்யப்பன், குமாரியை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT