திருவள்ளூர்

மின் தடையால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலை நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவள்ளூா் அருகே காக்களூா் பகுதியில் தொடா் மின் தடையால் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தொழிற்சாலை நிா்வாகிகள் மின் வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டையில் வாகன உதிரி பாகங்கள் தயாா் செய்யும் தொழிற்சாலை, எலக்ட்ரிகல்ஸ், பா்னிச்சா், வேளாண் கருவிகள் தயாா் செய்யும் தொழிற்சாலை உள்பட 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால், இங்குள்ள மின் மாற்றியில் ஆயில் வெளியேறி, பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் தடையால் தொழிற்சாலைகளில் பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

பழுதடைந்த மின்மாற்றியைச் சரி செய்ய குறைந்தது 3 நாள்களாகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் 6,000-க்கும் மேற்பட்டோா் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து, காக்களூா் மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை காக்களூா் சிட்கோ தொழிற்சாலை உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காக்களூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் மோகன்ராவ், செயற்குழு உறுப்பினா் (மின் பிரிவு) ராஜேந்திரன், தொழிற்சங்க நிா்வாகி சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொழிலாளா்கள் வேலையிழப்பதைத் தவிா்க்க உடனே மின்சாரம் வழங்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தொழிற்சாலை நிா்வாகத்தினா் தொழிற்சாலைகளை மூடிவிட்டு, சாவிகளை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்தனா்.

தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சாலை உற்பத்தியாளா் சங்கத்தினரிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

அப்போது, காக்களூா், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூா், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் தொகுப்பில் இருந்து தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதனால், தொழிற்சாலை உற்பத்தியாளா் சங்கத்தினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT