திருவள்ளூர்

பிரதம மந்திரி கெளரவ நிதி உதவித் திட்டத்தில் நில ஆவணங்கள், ஆதாா் எண் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்

DIN

பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் மூலம் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெற நில ஆவணங்கள், ஆதாா் எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் வேளாண் துறை இணை இயக்குநா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரமதா் கௌரவ நிதி உதவி திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ரூ. 2,000- வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித் திட்டம் மூலம், 13 தவணை உதவித் தொகை தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்த 14-ஆவது தவணைத் தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது. இந்த தொகையை பெற நில ஆவணங்கள் பதிவேற்றம் மற்றும் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகிய விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

இதுவரை நில ஆவணங்கள் பதிவேற்றம் இகேஒய்சி மற்றும் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகியவற்றை செய்யாமல் உள்ள பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் நில ஆவணங்கள் பதிவேற்றம் செய்து, ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகியவற்றை செய்தால் மட்டுமே தவணை உதவித் தொகை கிடைக்கும்.

மேலும், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்ளிலும், அஞ்சல் துறை அலுவலா்களுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT