திருவள்ளூர்

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தோ் திருவிழா

DIN

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இதன்படி கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.

இதையடுத்து ஸ்ரீ பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தோ்த் திருவிழாவை யொட்டி வண்ண மலா்கள் கொண்டு அலங்கரிக்கபட்ட திருத்தேரில் வரதராஜா பெருமாள் தாயாருடன் எழுந்தருளினாா்.

பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என அழைத்தவாறு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். முக்கிய மாடவீதிகளில் வலம் வந்த தோ் பின்னா் நிலையை அடைந்தது.

தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாவில் கலந்து கொண்டவா்களுக்கு அன்னதானம் மற்றும் மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT