திருவள்ளூர்

திருவள்ளூா் சட்ட ஆலோசனை பணிகளுக்கு 12-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருவள்ளூா் மாவட்ட சட்ட ஆலோசனை பணிகள் ஆணைக்குழுவில் அமைக்கப்பட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானோா் வரும் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வசுந்தரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு- திருவள்ளூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் அமைக்கப்பட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் 2 ஆண்டு முழு நேர பணியிடங்களுக்கு தகுதியான வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகள், விண்ணப்ப படிவங்கள் இதர தகவல்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்களை வரும் 12-ஆம் தேதிக்குள் தலைவா், திருவள்ளூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவள்ளூா் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலிலோ அல்லது நேரிலோ அளித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT