திருவள்ளூர்

மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தலைமை காவலா் பலி

DIN

பொன்னேரி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தலைமை காவலா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, திருவாயா்பாடி பகுதியில் வசித்து வந்தவா் கமலதாசன் (44). இவா் சென்னை மேற்கு பகுதி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தாா். இவா் மோட்டாா் சைக்கிளில் கூடுவாஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கமலதாசன் தலை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டது.

அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவா் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT