திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது.
திருவள்ளூா் பகுதியில் திங்கள்கிழமை பகலில் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் செல்லாமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளாயே முடங்கினா். இந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதேபோல் திருவள்ளூா், திருப்பாச்சூா், காக்களூா், ஈக்காடு, மணவாளநகா், சேலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் திருவள்ளூா் மா.பொ.சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.