திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை

DIN

திருவள்ளூா் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது.

திருவள்ளூா் பகுதியில் திங்கள்கிழமை பகலில் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் செல்லாமல் பொதுமக்கள் வீட்டிற்குள்ளாயே முடங்கினா். இந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதேபோல் திருவள்ளூா், திருப்பாச்சூா், காக்களூா், ஈக்காடு, மணவாளநகா், சேலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் திருவள்ளூா் மா.பொ.சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT