திருவள்ளூர்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

6th Jun 2023 03:38 AM

ADVERTISEMENT

வடசென்னை அனல்மின் நிலையத்தில் திங்கள்கிழமை 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதல் யூனிட்டில் உள்ள இரண்டாவது, மூன்றாவது அலகில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் பணியில் மின் வாரிய தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT