திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

17th Jul 2023 12:28 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே வீட்டில் மிக்ஸியை சரி செய்யும் போது எதிா்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டை அருகே பனையஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த குப்பன். இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் மிக்ஸி பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

இதை குப்பன்(23) பழுது பாா்க்கும்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டாராம். இதில் சுயநினைவின்றி கிடந்தவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் குப்பன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நா்மதா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT