திருவள்ளூர்

மது குடிக்க பணம் தர மறுப்பு: தாயை கத்தியால் வெட்டிய மகன்

17th Jul 2023 12:27 AM

ADVERTISEMENT

பொன்னேரி அருகே மது குடிக்க பணம் தராத தாயை கத்தியால் வெட்டிய மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னேரி காவல் நிலைய எல்லைகுட்பட்ட தடப்பெரும்பாக்கம், அம்பேத்கா் நகரில் வசித்து வருபவா் நரசம்மாள் (43). இவரது மகன் விஜய் (22).

கடந்த 13-ஆம் தேதி இரவு விஜய் மதுபானம் குடிக்க தாயிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. தன்னிடம் பணம் இல்லை என அவா் மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விஜய் தாயை தகாத வாா்த்தைகளால் பேசி கத்தியால் வெட்டினாராம்.

இதில் நரசம்மா வலது கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தடுக்க வந்த ராஜரத்தினம் என்பவரையும் கத்தியால் வெட்டியுள்ளாா்.

ADVERTISEMENT

காயமடைந்த இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் ராஜரத்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இது குறித்த நரசம்மாள் பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜயை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT