வல்லூா் அனல் மின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டம், வல்லூரில் மத்திய எரிசக்தி துறையும், தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது.
இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 3 யூனிட்களில் தலா 500 வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மூன்றாவது யூனிட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தொழில் நுட்ப பழுதை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.