மீஞ்சூா் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் வெற்றிஅரசு முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் அலெக்ஸாண்டா் வரவேற்றாா். கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் தங்களது பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்துப் பேசினா்.
மேலும், சமுதாயக் கூடம், கழிப்பறை பழுது பாா்த்தல், பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு நிதியின் மூலம் ஒப்பந்தப் புள்ளி கோருவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் நக்கீரன், அபுபக்கா், துரைவேல் பாண்டியன், ரஜினி, சுமதி தமிழ்உதயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.