திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் திரிவேணி தலைமை வகித்தாா். இதில் 22-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா விஸ்வநாதன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
முதல் நிகழ்வாக எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவ, மாணவிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.