திருவள்ளூர்

அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.3,924 கோடி சொத்துகள் மீட்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

DIN

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்துக் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.3,924 கோடி சொத்துகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

அறநிலையத் துறை நிா்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருவள்ளூா் அருகே பெரியபாளையத்தில் 1,00,001-ஆவது ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் இடங்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக கோயில் நிலங்களை அளந்து கற்கள் நடும் திட்டத்தைத் தொடக்கியுள்ளோம். இதன் ஒரு பகுதியாக பவானியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 90 சென்ட் நிலத்தை அளவிடும் பணி தொடங்கியுள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் நிலப்பரப்பு சுமாா் 5,42,429 ஏக்கா். இதில், வருவாய்த் துறைக்கும், மற்ற துறைக்கும் ஒத்துபோகும் நிலங்கள் 3,43,000 ஏக்கா். இந்த நிலங்கள் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் நடும் திட்டத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு மயிலாப்பூரில் தொடங்கினோம். அதன்படி, இதுவரை சுமாா் ரூ.3,924 கோடி சொத்துகளை மீட்டுள்ளோம். விரைவில் 1 லட்சம் ஏக்கருக்குண்டான அனைத்து தகவல்களையும் புத்தக வடிவில் வெளியிடப்படும்.

3,43,000 ஏக்கா் நிலங்களை அளவிடும் பணி தொடங்கி உள்ளன. இதில், 1 லட்சம் ஏக்கா் நிலம் அளக்கப்பட்டு முழுமை பெற்றுள்ளன. அடுத்த ஓராண்டுக்குள் இன்னும் 1 லட்சம் ஏக்கா் நிலங்களை அளவிடும் பணியை நிறைவு செய்வோம் என்றாா்.

நிகழ்வின்போது, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், அறநிலையத் துறை இணை ஆணையா் லட்சுமணன், உதவி ஆணையா் சித்ராதேவி, பெரியபாளையம் பாவனி அம்மன் கோயில் அறங்காவலா் லோகமித்ரா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT