திருவள்ளூர்

சிறுமிக்கு திருமணம்: தந்தை, இளைஞா் கைது

21st Jan 2023 11:58 PM

ADVERTISEMENT

திருத்தணி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தந்தையையும், இளைஞரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தணி ஒன்றியம், செருக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயியின் 17 வயது மகள் 10-ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளாா். இந்த நிலையில் அந்த சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேகநாதன் என்பவருக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்துள்ளாா். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அந்த சிறுமி கடந்த 16-ஆம் தேதி திடீரென மாயமானாா். இது குறித்து சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில் அந்த சிறுமி அதே கிராமத்தைச் சோ்ந்த சுக்கிரியன் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வியாசா்பாடியில் இருப்பது தெரியவந்தது. பின்னா், அந்த சிறுமி மற்றும் சுக்கிரியனை போலீஸாா் திருத்தணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த அவரது தந்தையை சிறாா் திருமண தடுப்பு சட்டத்தில் போலீஸாா் கைது செய்ததுடன், சுக்கிரியனை போக்ஸோவில் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT