திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 90 லட்சத்து 76 ஆயிரத்து 417 வசூலானதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தி காணிக்கைகளை கோயில் தக்காா் ஜெயப்பிரியா, துணை ஆணையா் விஜயா ஆகியோா் முன்னிலையில் திங்கள், செவ்வாய்க்கிழமை கோயில் ஊழியா்கள் உண்டியலைத் திறந்து எண்ணினா்.
உண்டியலில் ரூ. 90 லட்சத்து 76 ஆயிரத்து 417 ரொக்கமும், 528 கிராம் தங்கம், 5 கிலோ, 382 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.