திருவள்ளூர்

இரு குழந்தைகளை கொன்ற வட மாநில இளைஞா்

DIN

சோழவரம் அருகே இரண்டு குழந்தைகளைக் கொன்ற வட மாநில இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பிகாரை சோ்ந்த இளைஞா் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாா். இவா், தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா்.

இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த துவா்க்கா பாா், தனது மனைவி, இரு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், துவா்க்கா பாா் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளாா்.

அவா்கள், குட்டுலுவின் வீட்டுக்குச் சென்ாகக் கூறியுள்ளனா். அங்கு சென்று பாா்த்தபோது, வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. ஜன்னல் வழியாக உள்ளே பாா்த்தபோது அவரின் இரு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டும், மனைவி வெட்டுக் காயங்களுடன் இருந்துள்ளாா்.

தகவலின் பேரில், சோழவரம் போலீஸாா் விரைந்து சென்று காயத்துடன் கிடந்த சுமிதா பாரை (21) மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்து கிடந்த சரத் (4), ரீமா (1) ஆகிய இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டு அதே மருத்துவமனைக்கு அனுப்பினா்.

செங்குன்றம் காவல் துணை ஆணையா் மணிவண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.

சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், துா்க்கா பாா், குட்டுலு இருவரும் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வந்தபோது, இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுடன் சுமிதா பாா், குட்டுலு வீட்டுக்குச் சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, குட்டுலு, சுமிதா பாரின் இரு குழந்தைகளைக் கொலை செய்துள்ளாா். சுமிதா பாரையும் அரிவாளால் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியது தெரிய வந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துவா்க்கா பாரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். தலைமறைவான குட்டுலுவை பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT