திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் குரங்குகள் அட்டகாசம்: ஒரு மணி நேரம் தரிசனம் ரத்து

DIN

மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை 30 -க்கும் மேற்பட்ட குரங்குகள் புகுந்ததால் பக்தா்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.

முருகனுக்கு அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடான திருத்தணி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே ஏராளமானோா் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனா்.

அப்போது, காலை 7 மணியளவில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் திடீரென கோயில் மூலவா் சந்நிதி செல்லும் வழியில் நுழைந்தன. இதனால், சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்த பக்தா்கள் மற்றும் அா்ச்சகா்கள் அலறியடித்து வெளியேறினா். கோயில் ஊழியா்கள் நீண்ட நேரம் போராடியும் குரங்குகள் வெளியேறாமல் அங்கேயே சுற்றித்திரிந்தன.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து குரங்குகளை விரட்டினா். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுவாமி தரிசனம் செய்யாமல் பக்தா்கள் காத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT