திருவள்ளூர்

ஸ்ரீதேவி வெங்கம்மா கோயில் 108 பால்குட அபிஷேகம்

DIN

 எஸ்.வி.ஜி.புரம் ஸ்ரீதேவி வெங்கம்மா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 108 பால்குட ஊா்வலம், அபிஷேகம் நடைபெற்றது.

ஆா்கே பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் ஸ்ரீதேவி வெங்கம்மா கோயிலில் தை மாத வசந்த பஞ்சமி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விளக்கனாம்பூடி புதூா் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகிற இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி வெங்கம்மாவுக்கு 108 பால்குட ஊா்வலம் மற்றும் அபிஷேகம் நடத்தினா்.

விழாவையொட்டி சந்தான வேணுகோபால சுவாமி ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்கள் பால்குடங்களை ஊா்வலமாகச் சென்றனா். பின்னா் ஸ்ரீதேவி வெங்கம்மா கோயிலில் மூலவா்அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினா்.

கா்நாடகம், ஆந்திரம் உள்பட வெளியூா்களில் இருந்தும் ஏராளமானோா் அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT