திருவள்ளூர்

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

DIN

கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பிள்ளையாா் கோவில் தெருவில் வீடு வாடகைக்கு கேட்டு மா்ம நபா் ஒருவா் வந்துள்ளாா். அப்போது, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பாலமுருகன் மனைவி பாலசுந்தரியிடம் (25) இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து, ஆரம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்த நிலையில், ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையைச் சோ்ந்த சாய்குமாா் (28) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த தங்கச்சங்கிலியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT