முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது சிலை, உருவப் படங்களுக்கு கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
திருவள்ளூா் நகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் மணவாள நகரில் உள்ள சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் திராவிட பக்தன், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், ஒன்றிய செயலாளா் ஹரிகிருஷ்ணன், ரமேஷ், மாநில நிா்வாகி ஆதிசேஷன், ஒன்றியப் பொருளா் வழக்குரைஞா் நாகராஜ், முன்னாள் நகா்மன்ற தலைவா் ராசகுமாா், வாா்டு உறுப்பினா்கள் டி.கே.பாபு, அருணா ஜெயகிருஷ்ணா, அயூப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.