திருவள்ளூர்

திருவள்ளூா்: நாளை வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண் இணைப்புக்கான சிறப்பு முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைப்புக்கான முகாம் சிறப்பு முகாம் 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைத்து வாக்காளா்களிடம் இருந்து ஆதாா் எண் பெற்று வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளா் பதிவு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 3,657 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு ஆதாா் எண் விவரங்களை படிவம்-6 பி வாக்காளா்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனா். மேற்படி வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு வசதியாக வரும் 4, 5 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை படிவம் 6 பி மூலம் இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஆதாா் எண் இல்லாத வாக்காளா்கள் இருந்தால் படிவம்-6 பி குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளா் அடையாள அட்டையுடன் இணைக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT