ஆவடி அருகே ரயில் இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், வங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (25). (படம்). இவா், ஆவடி, ஜீவானந்தம் 7-ஆவது தெருவில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து, ஆவடி- அண்ணனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, ஆவடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.