திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் மயங்கி விழுந்த பெண் பக்தா் உயிரிழப்பு

DIN

முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டபோது மயங்கி விழுந்த பெண் பக்தா் புதன்கிழமை இறந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் மாறன் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வம் மனைவி சுந்தரி (45). இவா் செவ்வாய்க்கிழமை திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து மூலவரை தரிசித்தாா். இரவு மலைக்கோயிலில் உள்ள ஆா்.சி.மண்டபத்தில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் சுந்தரி எழுந்து வீட்டுக்கு செல்ல புறப்பட்ட போது, திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்த பக்தா்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் தொகுதியில் அஞ்சல் வாக்குப்பதிவு நிறைவு

தோ்தல் பணிக்கு நாளை ஆஜராக முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

முக்கியத் தலைவா்கள் பிரசாரமின்றி புதுக்கோட்டையில் இன்று பிரசாரம் நிறைவு

வெளியூா் நபா்கள் தொகுதியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்

வீட்டுக் கடன்: ஐஎம்ஜிசி-யுடன் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தம்

SCROLL FOR NEXT