வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள மூன்றாவது யூனிட் பகுதியில் ரூ.3 கோடி மின்னணுப் பொருள்களைத் திருடியதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்துள்து. இங்கு, கடந்த மாதம் உபகரணங்களை பொருத்துவதற்கான பல கோடி ரூபாய் பொருள்களை அனல்மின் நிலையத்தில் கன்டெய்னா் பெட்டியில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், மா்ம நபா்கள் இந்த கன்டெய்னா் பெட்டியை உடைத்து அதிலிருந்த பொருள்களைத் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கடந்த மாதம் 17-ஆம் தேதி மீஞ்சூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், சென்னை எண்ணூா் பகுதியில், தனிப்படை போலீஸாா் சந்தேகத்தின் பெயரில் 7 பேரைப் பிடித்து, செங்குன்றம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இதில், அவா்கள் ஹரிஷ் (21), விக்னேஷ் (20), வாசு (22), பிரதாப் (19), அருண்பாண்டி (28), முத்துபாண்டி (31), அஜித் (23) என்பது தெரிய வந்தது. இவா்கள் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்னணு உபகரணங்களைத் திருடிச் சென்று பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
தொடா்ந்து போலீஸாா் அனல் மின் நிலையத்தில் திருடிய பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 7 பேரைக் கைது செய்தனா்.