சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் நோக்கி நெல் அறுவடை இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னா் லாரி திருவள்ளூா் அருகே கிருஷ்ணா கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னை துறைமுகம் பகுதியிலிருந்து ஆந்திர மாநிலம் நோக்கி நெல் அறுவடை இயந்திரத்தின் உதிரி பாகங்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னா் லாரி திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியை திருவாரூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் ஓட்டிச் சென்றாா். அப்போது, அவ்வழியாக எதிரே வந்த மினி வேன் செல்ல வழி விடுவதற்காக லாரியை ஓரமாக இயக்கிய போது அம்பேத்கா் நகா் அருகே சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கிருஷ்ணா கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநா் காா்த்தி அதிா்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். அதைத் தொடா்ந்து கிருஷ்ணா கால்வாயில் விழுந்த கன்டெயினா் லாரியை சுமாா் 2 மணி நேரம் போராடி மீட்டனா். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.