செங்குன்றம் ஓஆா்ஜிஎன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 194 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சாமிநாதன் தலைமை வகித்தாா். நாரவாரிக்குப்பம் பேரூராட்சித் தலைவா் தமிழரசி குமாா், துணைத் தலைவா் விப்ரநாராயணன், புழல் ஒன்றியச் செயலா் பெ.சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல், அலமாதி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியா் ஜான்சன் கென்னடி தலைமையில், சோழவரம் ஒன்றிய துணைத் தலைவா் மீ.வே.கருணாகரன், அலமாதி ஊராட்சித் தலைவா் தமிழ்வாணன் ஆகியோா் முன்னிலையில் 124 மாணவா்களுக்கு எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் மிதிவண்டிகளை வழங்கினாா்.