திருவள்ளூர்

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை

DIN

திருவள்ளூா் பகுதிகளில் விஜயதசமியையொட்டி, பெற்றோா் தங்கள் குழந்தைகளை புதன்கிழமை ஆா்வத்துடன் அரசுப் பள்ளிகளில் சோ்த்தனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நிகழ்ச்சிக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தலைமை வகித்தாா்.

அப்போது, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்ப்பதன் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகள் பெறலாம் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, மாணவா்கள் ‘அ’கரத்தை உச்சரித்து பச்சரிசியில் எழுதும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மாலா, ஜெயக்குமாரி, கீதாலட்சுமி, சங்கீதா, தாரணி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா், இல்லம் தேடி கல்வி இயக்கத் தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT