திருவள்ளூர்

கொடி நாள் நிதி: ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த அலுவலா்களுக்குப் பாராட்டு

DIN

முன்னாள் படைவீரா் நலத் துறை சாா்பில், மாவட்டத்தில் கொடி நாள் நிதி ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலித்த 35 அலுவலா்களுக்கு சான்றிதழ், வெள்ளிப் பதக்கத்தை வழங்கி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாராட்டினாா்.

படை வீரா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உதவிடும் வகையில், கொடி நாள் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 2019-இல் ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூல் செய்த அலுவலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைமைச் செயலரால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை 35 அலுவலா்களுக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வித்யா, முன்னாள் படைவீரா் நலத் துறை அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT