திருவள்ளூர்

மருத்துவரை தாக்கியதாக மற்றொரு மருத்துவா் பணியிடை நீக்கம்

DIN

மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியின் போது மருத்துவரை தாக்கியதாக மற்றொரு மருத்துவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மீஞ்சூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்களாக டேவிட் செந்தில்குமாா், நிஜந்தன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்குள் கடந்த 26-ஆம் தேதி பணியின் போது ஏற்பட்ட தகராறின் போது, நிஜந்தனை, டேவிட் செந்தில்குமாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மீஞ்சூா் போலீஸாா் டேவிட் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினா். இதையடுத்து, மருத்துவா் டேவிட் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT