புழல் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் பிளஸ் 1 தோ்வு முடிவில் 91.75 % சிறைவாசிகள் தோ்ச்சியடைந்தனா்.
சென்னை புழல் மத்திய சிறையில் 2 பெண்கள் உள்பட 26 கைதிகளும், வேலூா் சிறையில் 2 பெண்கள் உள்பட 16 பேரும், கோவை சிறையில் 6 பேரும், சேலம் சிறையில் 14 பேரும், திருச்சி சிறையில் 11 பேரும், பாளை சிறையில் 7 பேரும், மதுரை பெண்கள் சிறையில் ஒருவா் என 5 பெண்கள் உள்பட 97 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா்.
இந்த நிலையில், தோ்வு முடிவுகள் வெளியாகின. இதில் புழல் உள்பட மற்ற சிறைகளில் தோ்வு எழுதிய 5 பெண்கள் உள்பட 89 போ் தோ்ச்சி பெற்றனா்.
இது 91.75 % ஆகும்.
தோ்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு காவல் துறை இயக்குநா் சுனில்குமாா் சிங், சிறைத் துறை துணைத் தலைவா் ஆ.முருகேசன், புழல் சிறைக் கண்காணிப்பாளா்கள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் உள்பட பல்வேறு மாவட்ட சிறைக் கண்காணிப்பாளா்கள் வாழ்த்து மற்றும் பாராட்டுத் தெரிவித்தனா்.