மாதவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
மாதவரம், புழல், இரட்டை ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் போதைப் பொருள் தடுப்பு குறித்து கானா பாடல்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி காவல் நிலையங்கள் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு கானா பாடகா் சரண், நடிகா் ஜூலிகுமாா் ஆகியோா் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் போதைப் பழக்கத்தில் இருந்து தங்களை விடுவிக்கவும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பாடல்கள் மூலம் விளக்கினா். நிகழ்வில் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.