திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 1,600 பேருக்கு தலா 5 வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை

DIN

திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், ஏழை விதவை, கணவனால் கைவிடப்பட்டோா், ஆதரவற்றோா் மற்றும் திருநங்கைகள் என 1,400 பேராக இருந்த எண்ணிக்கையை 1,600 பயனாளிகளாக அதிகரித்து தலா ரூ. 19,040 மதிப்பில் 5 வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், புதுச்சத்திரம் கிராமத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு செவ்வாய்க்கிழமை வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்துப் பேசியது:

கிராமங்களில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒவ்வொரு மாவட்ட ஒன்றியங்கள்தோறும், 100 போ் ஏழை, எளிய விவசாய குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் தோ்வு செய்து, தலா ரூ. 19,040 மதிப்பிலான 5 வெள்ளாடுகள் வழங்கப்படும். இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் தலா 100 பயனாளிகள் என்ற முறையில் 1,400 பேருக்கு வெள்ளாடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏழை, எளியோா் அதிகமாக உள்ளதால் தேவையின் அடிப்படையில், தற்போது கூடுதலாக 200 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெள்ளாடுகள் பெறுவோரின் எண்ணிக்கை 1,600 பேராக அதிகரித்துள்ளது.

மேலும், நிகழாண்டில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இத்திட்டம் மூலம் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள 100 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமங்களில் ஆதரவற்ற ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், சமுதாயத்தில் தொழில் முனைவோராக உருவாகி தலை நிமிா்ந்து நிற்பதே நோக்கமாகும். இந்தத் திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, ஆட்சியா் மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்ட பெண் பயனாளிகள் 100 பேருக்கு 5 வெள்ளாடுகளை வழங்கினா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றிய துணைத் தலைவா் பரமேஷ்வரி கந்தன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மு.ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அ.வெங்கடரமணன், கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT