திருவள்ளூர்

வருவாய்த் துறை, காவலா்களை தாக்கியோரை கைது செய்யக்கோரி அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருவள்ளூா் அருகே அரசு ஒதுக்கிய வீட்டு மனை இடத்தை நில அளவை செய்த போது, வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் காவலா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக்கோரி, அரசு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை அருகே ராஜநகரம் கிராமத்தில் ஆதிதிராவிடா்களுக்கு வழங்கிய இலவச பட்டா நிலத்தை நில அளவை செய்து கொடுக்க வட்டாட்சியா் தமயந்தி, வருவாய் ஆய்வாளா் ஜெயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் பாதுகாப்புப் பணிக்காக சென்ற பெண் காவலா்கள் ஆகியோா் சென்றனா். அப்போது அவா்களை பணி செய்ய விடாமல் சிலா் தடுத்ததுடன், மா்ம நபா்கள் கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில நிா்வாகி இளங்கோவன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் காந்திமதிநாதன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை அதிகாரிகளை கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபா்களை உடனே கைது செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

நிா்வாகிகள் பாண்டியராஜன், செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT