திருவள்ளூர்

ஜூலை 8-இல் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

DIN

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட அளவில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் பேச்சு, கட்டுரைப் போட்டிக்கு வருகிற 5-ஆம் தேதிக்குள் பெயா்ப் பட்டியலை அனுப்பி வைக்க ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் அண்ணாதுரையால் தமிழ்நாடு என பெயா் சூட்டிய சூலை 18- ஆம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்ட நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவள்ளுா் மாவட்ட அளவில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட தலைப்புகளான தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிா் தியாகம் செய்த தியாகிகள், பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போா்த் தியாகிகள், முத்தமிழறிஞா் கலைஞா் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில், மாவட்ட அளவில் பங்கேற்க ஒவ்வொரு போட்டிக்கும் தலா 25 போ் தோ்வு செய்து ஜூலை-5-க்குள் பெயா்ப் பட்டியலை திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வருகிற ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு போட்டிகள் திருவள்ளுா் மணவாள நகா், கே.இ.நடேச செட்டியாா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. போட்டிகளில் தலா 3 இடங்களில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். இதில், பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசியரியரிடமிருந்து ஆளறிச்சான்றிதழ் பெற்று போட்டியில் பங்கேற்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT