திருவள்ளூர்

பெரியபாளையத்தம்மன் கோயில் நகைகளை தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி கிடைக்கும்

DIN

பெரியபாளையத்தம்மன் கோயில் உள்ள 132 கிலோ நகைகளை உருக்கி வங்கியில் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.1 கோடி வருவாய் கிடைக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய, உபயோகமில்லாமல் உள்ள 132 கிலோ தங்க நகைகளை அரக்கு, செப்பு சுரைகள், கற்கள், இதர உலோகங்களை நீங்கி, சுத்தத் தங்கமாக மாற்றி, வங்கியில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்து, உருக்கப்பட்ட நகைகளை பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்த பின்னா் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் உள்ள நகைகளை உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தோம்.

முதல் கட்டமாக விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் சாத்தூா் கிளையில் ஒப்படைக்கப்பட்டன. தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தம்மன் கோயில் உண்டியல் நகைகளை சொக்கத் தங்கமாக மாற்றி (132 கிலோ 150 கிராம்) ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருக்கன்குடி கோயிலில் இருந்த 27 கிலோ தங்கம் உருக்கப்பட்டு வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.24 லட்சம் வருவாய் கிடைத்து கோயில் பணிகளுக்கு செலவிடப்படுகிறது. பெரியபாளையத்தம்மன் கோயில் நகைகள் உருக்கப்பட்டு சுத்தத் தங்கமாக மாற்றப்பட்டு வைப்பு நிதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா் அவா்.

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜீ, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், எம்.எல்.ஏ-கள் டி.ஜெ.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி) துரை.சந்திரசேகா் (பொன்னேரி), பரம்பரை அறங்காவலா் அஞ்சன் லோகமித்ரா, பாரத ஸ்டேட் வங்கி (அம்பத்தூா்) மண்டல மேலாளா் ராஜலட்சுமி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT