வேலுாா்: வேலுாரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதால் இருவா் பலியானாா்.
வேலுாா் எஸ்.எஸ்.மணியம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சீனிவாசன் (42). அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சீனிவாசன் (40). இவா்கள் இருவருக்குள்ளும் முன் விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள பெட்டிக் கடைக்கு இருவரும் சென்ற போது ஏற்பட்ட தகராறில், முருகன் மகன் சீனிவாசன், மற்றொரு சீனிவாசனை கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
தகவலறிந்த தெற்கு பகுதி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து தப்பியோடிய சீனிவாசனை தேடி வருகின்றனா்.