திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்ததாகவும், முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும் 247 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதோடு, அவா்களுக்கு ரூ.49 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.