கும்மிடிப்பூண்டி: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கும்மிடிப்பூண்டியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியரசு தினத்தை ஒட்டி தில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக அரசின் ஊா்தி இடம்பெறாது என்கிற மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் அறிவிப்பை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் அலங்கார ஊா்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் இருந்து நீக்கப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இதைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளா் ஜெ.அருள் தலைமை வகித்தாா். செங்கல்வராயன் முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றினாா்.
மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.