கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தை சோ்ந்தவா் மகேந்திரன் (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதை அறிந்த சிறுமியின் பெற்றோா்கள் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்கள்.
புகாரின்பேரில் போலீசாா் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினா். அப்போது 10 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது. தெரியவந்தது. பின்னா் அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனா்.