திருவள்ளூர்

நோயால் மகள் அவதி: தந்தை தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருவள்ளூா் அருகே ரூ.10 லட்சம் செலவு செய்தும் மகளுக்கு நோய் குணமாகாததால், தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41). இவா், ஆவடி அருகே பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் முடி திருத்தும் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி லதா பவானி (38). இவா்களது மகள் தாரணிக்கு (9) மூளைக் காய்ச்சல் காரணமாக, கடந்த 6 மாதங்களாக பேச முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து, ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தும், நோயை குணப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் வெள்ளிக்கிழமை முடி திருத்தும் கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பட்டாபிராம் காவல் ஆய்வாளா் ஜாா்ஜ் லாரன்ஸ் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT