திருவள்ளூா், தாமரைபாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா் மழை பெய்தது.
இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்குன்றம்-42, பொன்னேரி-38, ஆவடி-30, பூந்தமல்லி-23, சோழவரம்-22, தாமரைப்பாக்கம்-17, கும்மிடிப்பூண்டி-13, ஜமீன் கொரட்டூா்-6, திருவள்ளூா்-5, பூண்டி-2 மி.மீ.
மாவட்டத்தில் மொத்தம் 198 மி.மீட்டரும், சராசரியாக 13.20 மி.மீட்டா் மழை பதிவானது.