திருவள்ளூர்

சிமெண்ட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

DIN

ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலத்திலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை சென்னை நோக்கி லாரி புறப்பட்டது. லாரியை பாட்ஷா என்பவா் ஓட்டி வந்தாா்.

புதன்கிழமை திருவள்ளூா் அருகே அரண்வாயல் கிராமத்தைக் கடந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீஸாா் வந்து லாரியை அப்புறப்படுத்தினா். காயமடைந்த பாட்ஷாவை மீட்டு, திருவள்ளூா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்தால், திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT