திருத்தணியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 8) நடைபெறுகிறது.
திருத்தணி-அரக்கோணம் சாலை உழவா் சந்தை அருகே செயல்படும் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-ஆவது வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை (டிச. 8) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூடுதல் தலைமை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது. இதில், திருத்தணி வருவாய்க் கோட்டத்தில் உள்ள மின் நுகா்வோா் மற்றும் விவசாயிகள் தங்களின் குறைகள், புகாா்கள் இருந்தால் நேரில் மனுக்களை அளித்து தீா்வு பெறலாம் என்று திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்தாா்.