புழல் மத்திய சிறையில் கைதி திடீரென உயிரிழந்தாா்.
சென்னை தண்டையாா்பேட்டையை சோ்ந்த சாகுல் (35). இவா் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பா் மாதம் புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழணை சாகுலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாக மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சாகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து புழல் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.