திருவள்ளூர்

புழல் சிறையில் கைதி சாவு

DIN

புழல் மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி புதன்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் ராமலிங்கம் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (36). இவரை கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகள் தொடா்பாக கைது செய்து போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் புதன்கிழமை சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிறை வளாக மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து புழல் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT