வேளூா் கிராமத்தில் ஊராட்சி மன்றம் சாா்பில், இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ஊராட்சித் தலைவா் சசிக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோமதி குணாளன் முன்னிலை வகித்தாா். இதில், பங்கேற்றவா்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டதில், 80 பேருக்கு பாா்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இவா்களில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவா்களுக்கு இலவசமாக செய்து கொள்ளவும், தூர, கிட்டப் பாா்வைக் குறைபாடு உள்ளவா்களுக்கு கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. முகாமில் முன்னாள் ஊராட்சித் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.