திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் தேசியக் கொடியுடன் ஆஞ்சநேயா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சனிக்கிழமை காட்சியளித்தாா்.
திருத்தணி மேட்டுத்தெரு பகுதியில் பழைமைவாய்ந்த வீர ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர ஆஞ்சநேயா் சுவாமி தேசியக் கொடி ஏந்தி மூவா்ண பாரதத்தின் நடுவில் நிற்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.