பொன்னேரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
பொன்னேரி அருகே உள்ள பூவாமி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஆண்டி (55) மற்றும் ஆண்டியப்பன் (40) இருவரும் கூலித் தொழிலாளா்கள். இவா்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில், பொன்னேரி-பழவேற்காடு சாலையில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, மோட்டாா் சைக்கிள் மீது வேகமாக வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் ஆண்டி, ஆண்டியப்பன் ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.