திருவள்ளூர்

பொன்னேரி அருகே பைக் மீது வேன் மோதி தொழிலாளா்கள் இருவா் பலி

DIN

பொன்னேரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

பொன்னேரி அருகே உள்ள பூவாமி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஆண்டி (55) மற்றும் ஆண்டியப்பன் (40) இருவரும் கூலித் தொழிலாளா்கள். இவா்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில், பொன்னேரி-பழவேற்காடு சாலையில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, மோட்டாா் சைக்கிள் மீது வேகமாக வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் ஆண்டி, ஆண்டியப்பன் ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT