திருவள்ளூர்

கடும் வெப்பத்தால் காட்டு தீ: மீன்படி படகு எரிந்து சேதம்

DIN

திருவள்ளூா் அருகே பூண்டியில் கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீயால், மீன்பிடி படகு, ஆலமர விழுதுகள் எரிந்து சேதமடைந்தன.

பூண்டி நீா்த்தேக்கத்தைச் சுற்றிலும் வனத் துறைக்குச் சொந்தமான காப்புக் காடுகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட வெப்பம் வாட்டி வதைத்தது.

இந்த நிலையில், திடீரென காய்ந்த சருகுகளில் தீ பற்றியது. இந்த தீயானது மளமளவென பரவி அருகிலிருந்த ஆலமர விழுதுகள், மீன்பிடி படகு, செடி, கொடிகளில் பரவியது.

தகவலறிந்த திருவள்ளூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி காட்டுத் தீயை கட்டுப்படுத்தினா். இதனால், பெரிய மரங்களுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

கோடை வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சட்ட விரோதமாக யாராவது காட்டுக்குத் தீ வைத்தனரா என்ற கோணத்தில் தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT